Vignesh Marimuthu | April 13, 2022
ஏதுமற்ற ஒரு நீண்ட இரவு.
இன்னும் சற்று நேரத்தில் விடிய காத்து இருக்கும் பேரிரவு.
அறை காற்றாடியின் கீச்சலை தவிர்த்து எந்த சத்தமும் இல்லை.
ஆலமர பூச்சிகள் கூட உறங்கி விட்டது போல.
ஜன்னலோர வாடை காற்றில் கரைந்து கொண்டு இருக்கும் என் விரலிடை Marlboro.
சூரியன் வந்ததும் தூங்க செல்லலாம் என காத்திருக்கிறோம் நானும் வான் நிலாவும்..!